பல்வேறு ஜோனர்களில் எம்மவர்கள் குறும்படங்களை எடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விழிப்புணர்வுக் குறும்படமாக வவுனியாவில் இருந்து வெளிவந்திருக்கின்றது சஞ்ஜையின் “சிந்தனை செய்” குறும்படம்.
மனிதர்களால் வீணடிக்கப்படும் தண்ணீர் பற்றி குறிப்பிடும் இந்தப் படத்தில், மனிதனுக்குப் பயன்படாத நீர்; மரஞ்செடி, கொடிகளுக்காவது பயன்படட்டுமே! என்பதாக அமைகிறது.
படைப்பாளிகள் உலகம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் 02 நிமிட விழிப்புணர்வுப் படமான இதில், மிதுனா, மதுசுயா, அஜந்தன், தயாளன், கிருஷாந்தன், கவிசன் ஆகியோர் நடித்துள்ளார்கள். உதவி இயக்கம் – கபில் ஷாம், இசை – விகே ஸ்டார் குமணன், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சஞ்ஜை.