அவுஸ்ரேலிய அரசாங்கம் தங்கள் நாட்டுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் இலங்கை போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக பல லட்சம் ரூபாய்களைச் செலவு செய்து வருகின்றது.
அதன் அடுத்த படியாக குறும்படங்களுடாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும், எம் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் “ஸீரோ சான்ஸ்” குறும்படப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இம்முறை (2021) நூற்றுக்கும் அதிகமான குறும்படங்கள் அதற்கென கிடைக்கப்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.
தமிழில் கே.பிரபு இயக்கிய “துண்டுப்பிரசுரம்” என்கிற குறும்படம் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது. இரண்டாம் இடத்தை எஸ்.எஸ்.கேமல் இயக்கிய “ரோலர்” குறும்படமும், மூன்றாமிடத்தை கே.கிஷாந்த் இயக்கிய “ஸீரோ” குறும்படமும் பெற்றுக் கொண்டது.
முதலில் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு, இக்குறும்படங்கள் குறித்தான விரிவான பார்வையை தனித்தனியாக விரைவில் உங்களுக்கு தரலாம் என்றிருக்கின்றோம்.