அடுத்த வேட்டைக்குத் தயாராகும் விஷ்ணுஜன் – இதுவும் சரவெடியாகத் தான் இருக்கும்!

680

மட்டக்களப்பில் முதல் முழு நீளத்திரைப்படமான “வேட்டையன்” படத்தை இயக்கிய எஸ்.என்.விஷ்ணுஜனின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

LERO Productions சார்பில் LEROCIYAN TJ தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் டரில் டியூக் கதாநாயகனாக நடிப்பதுடன், அச்சுதன் அழகுதுரை ஒளிப்பதிவையும், கேசாந்த் இசையமைப்பையும் மேற்கொள்கின்றார்.

படத்தின் டைட்டில் மற்றும் ஃபொஸ்ட்லுக் என்பவற்றுடன் அதில் பணியாற்றும் ஏனையவர்களின் விபரங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பில் இருந்து முழு நீளத்திரைப்படத்திற்கான முயற்சிகள் பல காலம் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும் முதல் திரை கண்ட திரைப்படமாக வேட்டையன் விளங்குகின்றது. மட்டக்களப்பை தொடர்ந்து வடக்கு, மலையகம், கொழும்பு என அதனைக் காட்சிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், கொரோனா பேரிடர் காரணமாக அந்த முயற்சிகள் கைகூடவில்லை.

இந்நிலையில், விஷ்ணுஜனின் புதிய திரைப்படம் நாடளாவிய ரீதியில் வெளியாகவும், பெரு வெற்றி பெறவும் குவியம் சார்பில் வாழ்த்துகின்றோம்.