ஜோயலின் ‘சேரா கரைகள்’ குறும்படம்

549

அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும் சட்டவிரோத குடியேறிகளை மையப்படுத்தி இயக்குனர் ஜோயல் ஜேஆர் இனால் உருவாக்கப்பட்டிருக்கும் குறும்படம் ‘சேரா கரைகள்’.

இந்தப் படத்தினை zero budget இல் உருவாக்கியுள்ளதாக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். இதில் ஜசோதினி, ஹவிஜிதன் ஆகியோர் பிரதான பாத்திரம் ஏற்று நடத்துள்ளனர்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என தனியாளாக சகலவற்றையும் ஜோயல் கவனித்துள்ளதுடன், இப்படம் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட Zero Chance என்ற குறும்படப்போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.