நந்தா ஸ்ரீஸ்கந்தராஜாவின் இசை மற்றும் வரிகளில் உருவான “தீம்பாவை” பாடல்

1414

எம்.எம்.புரொடக்ஷன் தயாரிப்பில் அண்மையில் வெளிவந்துள்ள காணொளிப்பாடல் “தீம்பாவை”. இதனைத் தயாரித்து இசையமைத்துப்பாடியுள்ளார் நம்மவரான நந்தா ஸ்ரீஸ்கந்தராஜா.

இசையமைப்பாளர் நந்தாவைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவர், தற்பொழுது புலம்பெயர்ந்து பிரான்ஸில் வசிக்கின்றார். சிறுவயது முதலே இசையில் ஆர்வம் கொண்ட அவர் கடல் கடந்தும் அதனைத் தொடர்கின்றார் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.

இவரின் அண்மைய வெளியீடு “தீம்பாவை“ பாடல். இதனை நந்தாவுடன் இணைந்து பின்னணிப்பாடகி வந்தனா ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார். இறுதி இசைக்கலவை – ரபேல் ஜோனின்.

பாடல் வரிகளையும் நந்தாவே எழுதியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. காதலின் ஆழத்தைப் பேசக்கூடிய அழகான வரிகள் அதன் காட்சியமைப்புக்கு உதவியிருப்பது காணொளியைப்பார்க்கும் போது புரிகின்றது.

இந்தப்பாடலை தென்னிந்தியாவில் காணொளியாக்கியிருக்கின்றார்கள். எனவே, அதில் நடித்தது முதல் பங்கேற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவரும் தமிழகத்தினரே!. பாடல் கேட்பதற்கு மட்டுமன்றி பார்ப்பதற்கும் நன்றாகவே இருக்கின்றது.

எழுத்து, இயக்கம் – கார்த்திக் சுதாகர்
ஒளிப்பதிவு மற்றும் கலர் கலவை – பிரகதேஷ் பி
படத்தொகுப்பு – சாம்
மேலதிக கலர் கலவை – தனுஷ்
துணை இயக்குனர் – நந்தா குமார்
இணை இயக்குனர் – விநாயக் வி