நடிகர் அமரர் தர்ஷன் தர்மராஜிற்கு யாழிலும் மட்டக்களப்பிலும் அஞ்சலி

1124

இலங்கையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தர்ஷன் தர்மராஜ் (வயது 41) கடந்த 02 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவரது பூதவுடல் கொழும்பில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான இறக்குவானைக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

நடிகர் தர்ஷன் தர்மராஜின் திடீர் மரணம் இலங்கைத் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன் அன்னாரது ஆத்ம சாந்தி வேண்டி பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் யாழ். மாவட்ட கலைஞர்கள் சார்பிலான அஞ்சலி நிகழ்வு கடந்த 4ஆம் திகதி பல்சமய கருத்தாடல் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் சர்வமத தலைவர்கள், நண்பர்கள், சக கலைஞர்கள், மூத்த கலைஞர்கள், ஊடக நண்பர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு கலைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்வு நேற்று (06) ராவணா நடன மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விலும் சக கலைஞர்கள், நண்பர்கள், ஊடகத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.