யாழில் சினிமா கலைஞர்களுடனான சந்திப்புக்கு அழைப்பு!

433

இந்தியாவில் பல திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் பணியாற்றியிருக்கும் எம்மவரான சூரியப்பிரதாப் யாழ்ப்பாணம் வருகை தந்திருக்கின்றார். அவருடன் அவுஸ்ரேலியாவில் இருந்து சினிமா செயற்பாட்டாளர் ஒருவரும் வந்திருக்கின்றார்.

இவர்கள் இருவரும் இணைந்து யாழில் சினிமா செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்களைச் சந்திப்பதற்கு விருப்பம் கொண்டுள்ளனர். இதற்கமைய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நாளை (18.11.2022) யாழ். சரஸ்வதி மண்டபத்தில் ( ராஜா கிறீம் ஹவுஸ்) மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இராப்போசன விருந்தும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில், வாய்ப்புள்ள அத்தனை கலைஞர்களையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் அனுபவப் பகிர்வு , ஈழ சினிமாவின் இன்றைய நிலையும் எதிர்காலமும், அத்துடன் சில தயாரிப்பு முயற்சிகள் பற்றிய தகவல் பரிமாற்றம் என்பன இடம்பெறவுள்ளன.

சினிமாவில் இயங்கும் உங்கள் நண்பர்களுடனும் இந்த விடயங்களை பகிருமாறு கோரி நிற்கின்றனர்.