10 வருடத்தின் பின் மீண்டும் வந்த சங்கர்மகாதேவன் – ஷியாமலங்கன் கூட்டணி “ராசாத்தியே” பாடல்

222

நம் நாட்டு இசையமைப்பாளர் ஷிலாமலங்கனின் இசையில் பின்னணிப்பாடகர் சங்கர்மகாதேவன் பாடி 10 வருடங்களிற்கு முன்னர் வெளிவந்த “அழகிய தென்றலே” பாடலை பலரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

யு-ரியூப்பில் இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியிருக்கும் அப்பாடலின் செம்மைப்படுத்தப்பட்ட புதிய வடிவத்தை (Remix) Rap வரிகளுடன் இணைத்து “ராசாத்தியே” என்ற பாடலாக வெளியிட்டிருக்கின்றார்கள்.

துள்ளலிசையில் அமைந்த இந்தப்பாடலுக்கு ரத்யாவின் ராப் வரிகள் மற்றும் குரல் தனி அழகு. ரீமிக்ஸூக்காக சங்கர்மகாதேவனின் குரலை பயன்படுத்திய விதமும் அழகு. இந்தப்பாடலை மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Composition & Arrangement: Shyamalangan
Lyrics: Na.Muthukumar, Irettai Padhai Segar
Vocals: Shankar Mahadevan, Rap & Lyrics Rathya
Refix: DEYO