திரைக்கு வருகின்றது சசிகரன் யோவின் “வெளிநாட்டுக்காசு”

443

சசிகரன் யோ இயக்கத்தில் டேறியன், விதுர்சன், பூர்விகா, ரெமோ நிஷா, ஜெனிஸ்டன், சபேசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி பலரது வரவேற்பையும் பெற்றது “வெளிநாட்டுக்காசு” வெப் தொடர்.

இந்தத் தொடரின் நீட்சியை குறைத்து, அதனை ஒரு திரைப்படமாக்கி வெளியிடும் முனைப்பில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இதற்கமைய திரையிடலுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.

“50க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகிய எம்முடைய வெளிநாட்டுக்காசு தொடரினை 3.30 மணித்தியாலங்களில் இருந்து சுருக்கி 2.30 மணி நேர படமாக மாற்றி, வருகின்ற 31ஆம் திகதி மாலை 4.30 இற்கு உடுப்பிட்டி நிமலேந்திரா திரையரங்கில் வெளியிட உள்ளோம்.

மக்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை நிறையவே இருக்கின்றது. அந்த நம்பிக்கையில் தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் ஏனைய திரையரங்குகளிலும் இதனை வெளியிட எண்ணியுள்ளோம்!!!

எங்கட கதை எங்கட படம் என்பதையும் தாண்டி!! எங்கட கதை கண்டிப்பாக உங்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதோடு உங்களது நேரத்தை வீண்விரயம் செய்யாத ஒரு படைப்பாகவும் கட்டாயம் இருக்கும்!

உங்கட ஆதரவுதான் எங்களது படைப்புக்களின் அத்திவாரமாக அமையும்!

உங்கள் அனைவரதும் வருகையை எதிர்பார்த்து நாங்கள்!

– திரை-