மெல்லிய தூறலாய் மனதை தொடும் ஸ்ரீவிஜய்யின் “அடை மழை” பாடல்

299

வருண் துஷ்யந்தனின் இயக்கத்தில் ஸ்ரீவிஜய் ராகவனின் இசையில் சீதாராமன் சஞ்ஜீவனின் ஒளிப்பதிவு மற்றும் Vstudio இன் படத்தொகுப்பில் வெளிவந்திருக்கும் பாடல் “அடை மழை”.

இந்தப்பாடலுக்கான வரிகளை அக்ஷயா பாஸ்கரன் எழுதியிருப்பதுடன் சையத் சுபஹான் மற்றும் மகிஷா பகீரதன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் இசைக்கலவை சாயிதர்சன்.

காணொளிப்பாடலில் ஆர்ஜே நெலு மற்றும் திலக்ஷினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பாடலின் பெயர் என்னவோ “அடை மழை”யாக இருந்தாலும் மனதை வருடும் மெல்லிய தூறலாய் பாடலுக்கான இசையை அமைத்திருக்கின்றார் ஸ்ரீ விஜய்.

ஒளிப்பதிவும் கச்சிதமாக இருக்கின்றது. நாயகன், நாயகி ஓடும் போது அவர்களின் பாதையிலேயே பயணிக்கும் கமெரா காட்சிகள் அசத்தல். கூடவே இயற்கையின் குளிர்மையையும் சிறைப்பிடித்திருக்கிறார்கள்.

பாடலாசிரியராக அறியப்பட்ட வருண் துஷ்யந்தன் இயக்குனராகவும் இந்தப்பாடலில் முத்திரை பதித்திருக்கின்றார். நெலு மற்றும் திலக்ஷினியின் நடிப்பும் பாடலின் நாதத்துக்கு ஏற்றது போல அளவாக, அருமையாக உள்ளது.