‘போடியார்’ திரைப்படத்தின் 2 ஆவது பாடல் வெளியாகியது

457

விஷூவல் ஆர்ட் மூவிஸ் தயாரிப்பில் கோடீஸ்வரன் இயக்கத்தில் விரைவில் திரை காணவுள்ள படம் “போடியார்”. இந்தப்படத்திற்கு ஏ.ஜே.சங்கர்ஜன் இசையமைத்துள்ளார்.

சங்கர்ஜன் இசையில் “மீன் பாடும் ஊரு” என்ற பாடல் அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், போடியார் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இந்த வாரம் வெளியாகியுள்ளது.

“கார் கூந்தல் தானாட” என்ற இந்தப்பாடலுக்கான வரிகளை என்.பவதாகர் எழுதியுள்ளதுடன் தேஷானி பாடியுள்ளார்.

வைத்தியர் அருளானந்தம், சதா சண்முகநாதன் மற்றும் முரளிதரன் தயாரித்துள்ள இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Singers: Deshany M
Lyrics By: N. Pavathakar
Music, Mixed and Mastered by: AJShangarjan
Directed By: K.Kodeeswaran
Produced By: Dr. Arulanendem, Satha Shanmuganathan & P.Muralitharan
Production: Visual Art Movies.