இணுவில் கிராமத்தின் பெருமையையும் சிறப்புக்களையும் பேசும் “இனி மீளும் இணுவில்” பாடல்

231

இணுவையூர் ஆர்.ஏ.ராஜன் பெருமையுடன் வழங்க கருணைநாதன் கஜவிந்தனின் வரிகளில் வெளியாகியுள்ளது “இனி மீளும் இணுவில்” பாடல். யாழ்ப்பாணத்தின் இணுவில் என்கிற கிராமத்தின் சிறப்புக்களையும் பெருமைகளையும் கூறும் விதத்தில் பாடல் அமையப்பெற்றுள்ளது.

இந்தப்பாடலுக்கான இசையை பத்மயன் சிவா அமைத்துள்ளார். புட்டுப்பாட்டு புகழ் ரமணன், சண்முகப்பிரியன் மற்றும் கல்யாணி ஆகியோர் பாடியுள்ளனர்.

பாடலுக்கான ஒளிப்பதிவை அஜந்தன் சிவா மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பு பணிகளை ரெஜி செல்வராசா கவனித்துள்ளார். ஊரெழு பகியின் நடன இயக்கத்தில் மிகவும் சிறப்பாக வந்துள்ளது பாடல்.

செம் மண் புழுதிக்காட்சிகளுடனும் வரிகளுடனும் ஆரம்பமாகும் பாடல் இணுவில் கிராமத்தின் அழகை Aerial view இல் காட்டுகின்றது. அப்படியே கிராமத்தின் விவசாயத்தையும் கலை, கலாசாரத்தையும் விபரிப்பது போது காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. பல கலைஞர்களின் பங்கேற்புடன் இந்தப்பாடலை திறம்பட இயக்கியுள்ளார் இணுவையூர் நித்தியதாஸ்.

வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு.

பாடல் விமர்சனம்

பாடலைப்பார்க்க..