மறைந்த கலைஞன் ரோஜிதன் கதைக்கருவில் உருவான “கனவாக நீ” காணொளிப்பாடல்

130

ஏ.ஜெ.சங்கர்ஜன் இசையில் Black shader வழங்கும் “கனவாக நீ“ பாடல் அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்தப்பாடலுக்கான வரிகளை நா.பவதாகர் எழுதியிருந்ததுடன், ம.டேஷானி பாடியிருந்தார். கணனி வரைகலைகளுடான காட்சியமைப்பை ந.சதீஸ்கரன் மேற்கொண்டிருந்தார்.

இந்தப்பாடல் மறைந்த கலைஞன் ரோஜிதன் அவர்களின் கதைக்கருவில் உருவானது. எனவே, இப்பாடலை அவரது 31 ஆம் நாள் நினைவஞ்சலியை முன்னிட்டு பாடல்குழுவினர் கடந்த 26 ஆம் திகதி வெளியிட்டிருந்தனர்.