மருத நிலத்தின் அழகைச் சொல்லும் “பச்சை வயல்” பாடல்

330

குயில் பாட்டு படைப்பகம் தயாரிப்பாக சாந்தரூபியின் இசை மற்றும் வரிகளில் வெளிவந்துள்ள பாடல் “பச்சை வயல்”.

இந்தப்பாடலை CKM சுப்ரமணியம் பாடியுள்ளார். என்னுயிர்க் கீதங்கள் 50 பாடல் இசைத்தட்டில் இருந்து ஒரு பாடலாக இது முன்னர் வெளிவந்திருந்தது.

தற்சமயம் காணொளி பாடலாக வெளிவந்துள்ள இதில், சுவீகரன் MSK, ரொபின்ஷா ஆகியோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ரெஜி செல்வராசா கவனித்துள்ளார்.

மருத நிலத்தின் அழகை பிரதிபலிக்கும் வகையில் பச்சைப்பசேலென்ற வயல்களுடாக செல்லும் ட்ரோன் காட்சிகள் குளுமை. நம்ம ஊரும் இவ்வளவு அழகா? என்று வியக்கும் வகையில் சாதாரண கண்ணுக்கு புலப்படாத கிளிநொச்சி – உருத்திரபுரத்தின் அழகை கமெரா கண் கொண்டு அசத்தியிருக்கின்றார் ரெஜி செல்வராசா.

MUSIC COMPOSING & LYRICS ” SANTHARUPI (AMBALADIYAL)
MUSIC ARRANGEMENT & VOCAL : CKM SUBRAMANIYAN
CAST : SUVIKARAN MSK & ROBINSHA
CINEMATOGRAPHY & EDIT : REJI SELVARASA
MAKEUP : DARIEN