தவறான வழியில் வெளிநாடு செல்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் குகீந்தனின் ‘வருவான்’ குறும்படம்

589

தீ குகீந்தனின் இயக்கத்திலும் DreamTalkies இன் தயாரிப்பிலும் உருவான குறும்படம் தான் ‘வருவான்’

இந்த குறும்படம் தவறான வழியில் வெளிநாடு செல்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக எடுக்கப்பட்டுள்ளது.

படகு வழியாக அவுஸ்ரேலியா செல்லும் ஒருவரின் குடும்பம்; அவர் சென்ற பிறகு எப்படியான பிரச்சனைகளை எதிர்நோக்குகிறது என்பதையும், செல்லும் வழியில் அவர் எவ்வாறான பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றார் என்பதனையும் எடுத்து இயம்புகிறது இக்குறும்படம்.

இதில் பல புதுமுக கலைஞர்கள் நடித்திருக்கின்றனர். உதாரணமாக மூல கதாப்பாத்திரமான யனு என்பவரின் அம்மா பாத்திரத்தில் நடிக்கும் பெண் கதையின் பாதி பாகத்தை தாங்கி பிடிக்கின்றார். மற்றும் சிறு சிறு பாத்திரங்களும் தங்கள் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு வலுச்சேர்த்திருக்கின்றன.

இந்தக் குறும்படத்தின் பின்னணி இசை , ஒளிப்பதிவு மற்றும் ஒளித்தொகுப்பு என்பவற்றை படத்தின் இயக்குனரே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.