நாளை வெளியாகிறது “பாலை நிலம்” திரைப்படம்!

404

ஜூட் சுகியின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் தாயக மண் வாசனையுடன் உருவாகியுள்ள “பாலைநிலம்” திரைப்படம் நாளை வெளியாகிறது.

நாளை (03) மாலை 6.30 மணிக்கு யாழ். ராஜா திரையரங்கில் சிறப்புக்காட்சியும், மறுநாள் (4ஆம் திகதி) 03 காட்சிகளும் திரையிடப்படவுள்ளன. காலை 10.30, மதியம் 2.30 மற்றும் இரவு 6.30 காட்சிகளாக இவை திரையிடப்படவுள்ளன.

ஏறக்குறைய ஒரு வருடத்தின் பின்னர் (புத்தி கெட்ட மனிதர் எல்லாம் -இயக்குனர் சிவராஜ்) ஒரு திரைப்படம் யாழில் வெளியாகின்றது. எனவே, எம் சினிமா ரசிகர்கள் பெருமளவில் வந்து திரையரங்கில் இத்திரைப்படத்தை கண்டு களித்து படக்குழுவினரை ஆதரிக்க வேண்டும் என்பது எங்களின் தாழ்மையான வேண்டுகோள்.

2J மூவிஸ் தயாரிப்பில் ஜூட் சுகியின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் ஒளிப்பதில் உருவாகியுள்ள “பாலை நிலம்” திரைப்படத்தில் ரத்னகாந்தன், அபர்ணா, ராஜா மகேந்திரசிங்கம், மகாலிங்கம், விமல் ரோய், ஷாஜா, லச்சா, விமலரூபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்தத்திரைப்படத்திற்கான இசை பிரசாந்த் கிருஷ்ணபிள்ளை. படத்தொகுப்பு நிவேன், கிராபிக்ஸ் தங்கவேல் சிவநேசன்.

Palai Nilam releasing promo