நோர்வே- ஈழ – தமிழக கலைஞர்களின் கூட்டுப்பங்களிப்பில் வெளிவந்துள்ள “மாயை” பாடல்

365

நோர்வே- ஈழ – தமிழக கலைஞர்களின் கூட்டுப்பங்களிப்பில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் “மாயை”. இந்தப்பாடலுக்கு விக்கி மகேசன் இசையமைத்துள்ளதுடன் வரிகளை ரூபன் சிவராஜா எழுதியுள்ளார்.

சூப்பர் சிங்கர் புகழ் ஹரிகரசுதன் பாடலைப்பாடியுள்ளார். ராப் வரிகளை ஜதுசா பாடியுள்ளார்.

காணொளியாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை வட்சு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். பிரியந்தன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

சரண், கமலராணி கேசவராஜ், அஜந்தன் சிவா, சாரங்கன், பிரணவன், சாபிதன், சந்தோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.