நேரு கருணாகரன் எழுதிய உலக சினிமா கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

270

சினிமா விமர்சகர் – சட்டத்தரணி நேரு கருணாகரன் எழுதிய சினிமா கட்டுரைகளின் தொகுப்பு நூலான “களவாடப்பட்ட தலைமுறைகளின் கதை” நூல் வெளியீடு எதிர்வரும் சனிக்கிழமை (29.07.2023) ஹட்டன் நகர சபை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சட்டத்தரணி க.விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம் நிகழ்த்தவுள்ளார். நூல் அறிமுகவுரையை பண்டாரவளை மாநகர ஆணையாளர் தனராஜ் கஜேந்திரகுமார் நிகழ்த்தவுள்ளார்.

கருத்துரைகளை சென். கிளையர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் வே. தினகரன், சட்டத்தரணி சு.விஜயகுமார் மற்றும் கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எட்டியாந்தோட்டை கருணாகரன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.

தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்புரையும் நன்றியுரையும் இடம்பெறும். நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.