கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தெரிவாகியிருக்கும் சோபனின் ‘எல்லையற்று விரிகிறதோர் இரவு’

209

இந்தியாவின் கேரளாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள 15ஆவது International Documentary & Short Film Festival of Kerala திரைப்பட விழாவில் இலங்கையில் உருவாக்கப்பட்ட ‘எல்லையற்று விரிகிறதோர் இரவு’ என்ற குறும்படமும் தெரிவாகியுள்ளது.

இந்தியாவின் கேரளாவில் நடக்கும் ஒரு முக்கியமான திரைப்பட விழா International Documentary & Short Film Festival of Kerala ஆகும். இந்த திரைப்பட விழா கடந்த பதினைந்து ஆண்டுகளாக கேரளாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்பட விழாவானது கேரளாவில் நடக்கும் International Film Festival of Keralaவின் (IFFK) ஒரு பகுதியாக குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கென நடத்தப்படுவதாகும்.

இந்தியாவிலேயே 27 ஆண்டுகளாக நடைபெறும் இரண்டாவது முக்கியமான ஒரு திரைப்பட விழா IFFK என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடந்த IFFK விழாவில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலக சினிமாவில் மிகவும் முக்கிய பங்காற்றிய பேலா டார் (Bela Tarr) கலந்துகொண்டார்.

அதோடு, International Documentary & Short Film Festival of Keralaவில் வெவ்வேறு பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் வருடந்தோறும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதில் சர்வதேச பகுதி (International Section) என்பது இந்தியா அல்லாத மற்றைய நாட்டு குறும்படங்கள் இணைத்துக்கொள்ளப்படும் பகுதியாகும்.

இவ்வருடம் 15ஆவது International Documentary & Short Film Festival of Keralaவில் 53 குறும்படங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அதில் அமெரிக்கா, ஈரான், சீனா, இஸ்ரேல், ஹங்கேரி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளின் படங்களுடன், இலங்கை சார்பாக ‘எல்லையற்று விரிகிறதோர் இரவு’ என்ற குறும்படமும் தெரிவாகியுள்ளது.

இக்குறும்படத்தை முல்லைத்தீவு, முள்ளியவளையில் வசிக்கும் வேல்ராஜா சோபன் என்பவர் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ராசையா லோகநாதன், செல்வராஜ் லீலாவதி மற்றும் ஜெனோஷன் ஜெயரட்ணம் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் உதவி ஒளிப்பதிவாளராக திலீப் லோகநாதனும், உதவி இயக்குநர் மற்றும் Co-Writerஆக புவனேஷ்வரன் பிரஷாந்த் என்பவரும், இரண்டாவது உதவி இயக்குநராக Rj பெனயா என்பவரும், கள உதவியாளராக காந்தரூபன் என்பவரும், Foley & Sound Mixஐ புவனேந்திரன் பிரணவன் என்பவரும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.