தாயகம் திரும்பிய கில்மிஷாவுக்கு யாழில் அமோக வரவேற்பு

102

ஸீ தமிழ் சரிகமப இளையோர் பாடல் போட்டி சீஸன் 3 இல் வெற்றி பெற்ற ஈழத்து இசைக்குயில் கில்மிஷா இன்று (28) காலை தாயகம் திரும்பினார்.

சென்னையில் இருந்து யாழ். பலாலி விமான நிலையத்தை இன்று காலை 11.30 மணியளவில் வந்தடைந்த கில்மிஷாவுக்கு அங்கு மிகப்பிரமாண்டமான முறையில் வரவேற்பு இடம்பெற்றது.

அங்கிருந்து திறந்த வாகனம் ஊடாக தெல்லிப்பளையை அடைந்து பின்னர் காங்கேசன்துறை வீதியூடாக யாழ். நகரை அடைந்து அங்கிருந்து ஏ9 வீதியூடாக கச்சேரி வரை சென்று பின்னர் கோயில் வீதியூடாக நல்லூரை அடைந்த கில்மிஷாவின் வாகனப்பவனி பின்னர் செம்மணி வீதியூடாக யாழ். வளைவை சென்றடைந்தது.

அதன் பின்னர் மேள, தாள, பொம்பலாட்டங்களுடன் கில்மிஷாவின் சொந்த ஊரான அரியாலையை அடைந்த பின்னர் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்ட அவர் மணவறை வடிவில் அமைந்த முத்துச்சப்பரத்தில் ஏற்றப்பட்டு பிரதான நிகழ்வு இடம்பெறும் மைதானம் வரை அழைத்துச் செல்லப்பட்டார்.

கில்மிஷாவை வரவேற்க பலர் விமான நிலையத்தில் திரண்டிருந்தது மாத்திரமல்லாது, வழி நெடுகிலும் பலர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.