சனாதனின் “மௌன மொழி” first look வெளியீடு – தலைநகரில் இருந்து ஒரு முழு நீள திரைப்படம்!

661

பல குறும்படங்களை இயக்கி நடித்திருப்பவர் சனாதன். அவரது குறும்படங்கள் எப்பொழுதுமே சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசியிருக்கின்றன. இப்பொழுது முழு நீளத்திரைப்படம் எனும் கனவுடன் களமிறங்கியிருக்கின்றார்.

இதற்கான அறிவிப்பு அண்மையில் கொழும்பு – முகத்துவாரம் வெங்கடேஷ்வர மகா விஷ்ணு ஆலய திருமண மண்டபத்தில் இடம்பெற்ற விருது நிகழ்வொன்றில் விடுக்கப்பட்டது.

ரவீந்திரன் தயாரிப்பில் வினோத்ரோன் ஒளிவண்ணத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு “மௌன மொழி” எனப்பெயரிட்டிருக்கின்றார்கள்.

தீப்திகா, ஜனா ரவி, கவிநாத், கலை ரியா, பிரிய தர்ஷினி, கேதீஸ், பிரகேஷ், இஷாலினி ஆகியோர் நடிப்பில் அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும், எதிர்வரும் 2023இல் திரைப்படம் திரைக்கு வர இருப்பதாகவும் அறிவித்திருக்கின்றார்கள்.

இது குறித்து இயக்குனர் சனாதன் குறிப்பிடுகையில், நிச்சயமாக மிகப்பெரிய ஒரு முயற்சி. அதை நிதர்சனமாக்க எங்கள் அணி கடுமையாக உழைக்கும். அதே நேரத்தில் உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் இணைந்தால் மாத்திரமே இதை சாத்தியமாக்கலாம். அந்த நம்பிக்கையில் களம் இறங்குகின்றோம் – எனத்தெரிவித்துள்ளார்.

படக்குழுவினருக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்.