“ரிச்சர்ட்” படக்குழுவின் ஊடக சந்திப்பு

730

கிருஷ்ணகுமார் பிரேமலக்ஷன் இயக்கத்தில் உருவான “ரிச்சர்ட்” திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் திகதி மட்டக்களப்பில் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் விஷ்ணுஜன், நடிகை சந்தியா விக்டர் ஆகியோர் நேற்று ஊடகங்களைச் சந்தித்துள்ளனர்.

மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பேசிய இயக்குனர் பிரேமலக்ஷன், “எதிர்வரும் 24 ஆம் திகதி முழு நீள திகிலூட்டும் திரைப்படமான ரிச்சர்ட் மட்டக்களப்பு சாந்தி மற்றும் செல்லம் திரையரங்குகளில் வெளிவரவிருக்கின்றது. இதற்கு மக்களின் ஆதரவினை நாங்கள் கோரி நிற்கின்றோம்.

இந்தத் திரைப்படம் சில உண்மைக் கதைகளைத் தழுவியதாகவும் கற்பனை கலந்த கதாம்சம் கொண்டதாகவும் இருக்கின்றது.

மட்டக்களப்பில் இருந்து பல இளைஞர்கள் இன்று சினிமாவில் ஆர்வத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான ஆதரவு என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. எனவே, எமது இளைஞர்களின் இவ்வாறான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது உறவுகள் இவ்வாறானவர்களை ஊக்கப்படுத்தி மென்மேலும் படைப்புக்களை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

“ரிச்சர்ட்“ திரைப்பட திரையிடல் நேரம் மற்றும் முற்பதிவுகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.