தமிழுக்காய் ஒரு பாடல் முகடு படைப்பகத்தின் “வேரும் விழுதுகளுமாய்”

266

முகடு படைப்பகத்தின் வெளியீடாக பிரியன் தம்பிராஜா இசையில் வெளிவந்துள்ள பாடல் ”வேரும் விழுதுகளுமாய்”.

தமிழின் பெருமை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப்பாடலுக்கான வரிகளை ப.பார்தீ எழுதியுள்ளார். வருணவி தவகணேஷ் பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் “இலங்கேயன் பிக்சர்ஸ்” ரெஜி செல்வராசா.

இதில் தயாரிப்பு முகாமையாளராக சுவிகரனும், உதவி ஒளிப்பதிவாளராக விதுசனும், கலை இயக்குனராக டேறியனும் பணியாற்றியுள்ளனர். சிறிநவசுதன் இணைத்தயாரிப்பாளராக இணைந்த இந்த பாடலை ப.பார்தீ தயாரித்துள்ளார்.