RJ வாணியின் “யாதுமானவள்” குறும்பட வெளியீடு

1043

ஒப்பனைக் கலைஞராகவும் நடிகையாகவும் அறியப்பட்ட ஆர்.ஜே.வாணியின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “யாதுமானவள்” குறும்பட வெளியீடு நேற்று (10) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழத்திரை (செல்வா திரையரங்கு) இல் மாலை 03.30 இற்கு இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர், ஈழ சினிமா அபிமானிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரபா, M.S.F சஜி, RJவாணி ஆகியோர் பிரதான பாத்திரத்திலும் தர்ஷி, கிரிஷாந்த், ராகுல் துணைப்பாத்திரங்களிலும் நடித்திருக்கும் இந்தக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவை சயேசன் (கிளிக்ஸ் கிரியேஷன் ஸ்டுடியோ) மேற்கொண்டுள்ளார்.

படத்தொகுப்பு பணிகளை S.A. நிலான் மேற்கொண்டுள்ளதுடன் ரொஷான் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் R.J வாணி.